ராகு மற்றும் கேதுவுக்கு ஜோதிடவியலிலும்,இந்து மதத்திலும் சிறப்பான இடம் உள்ளது.நவக்கிரகங்களில் இந்த இரண்டும்
கோள்களூம் பாம்பாக சித்தரிக்கபடுகிறது.திருஞான சம்பந்த சுவாமிகள் கோளருபதிகத்தில் கீழ்கண்டவாறு பாடுகிறார்.
"வேயுறு தோளியபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவிமாசறு
திங்கள் கங்கை முடிமே லந்தென்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாராவர்க்கு மிகவே"
அதாவது நவக்கிரங்களாகிய ஒன்பது கோள்களையும் சிவபெருமான் வீணை வாசித்து அவற்றின் கொடுமைகளை நீக்கி நல்லவராகச் செய்கிறார் என்று பொருள்.
அறிவியலில் சூரியனை சுற்றும் ஒன்பது கோள்களில் இந்த இரண்டு கோள்கள் ராகு மற்றும் கேதுவும் இடம்பெறவில்லை.உண்மையில் இவை இரண்டும் நிழல் கோள்கள் என அழைக்கபடுகிறது.
நமக்கு எல்லாருக்கும் தெரியும் பூமி சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது அதேபோல சந்திரன் பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது.சந்திரனுடைய நீள்வட்டப்பாதை பூமியின் நீள்வட்டப்பாதையை இரண்டு இடத்தில் சந்திக்கிறது.சந்திரன் தெற்க்கிலிருந்து வடக்காக செல்லும் போது ஒரு புள்ளியிலும்,வடக்கிலிருந்து தெற்க்காக செல்லும் போது ஒரு புள்ளியிலும் சந்திக்கிறது.வடக்கு சந்திப்புக்கு ராகு என்றும், தெற்கு சந்திப்புக்கு கேது என்றும் பெயர்.கீழே காட்டப்பட்டுள்ள படத்தில் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளிகள்தான் சந்திரகிரகணத்தையும்,சூரியகிரகணத்தையும் ஏற்ப்படுத்துகிறது.இப்படி சூரியகிரகணக்காலத்தில் சூரியனுக்கும்,புமிக்கும் இடையே சந்திரன் வருகிறது.இது நமக்கு சூரியன்மீது நிழல் விழுவது போல தோன்றும்.
அக்காலத்தில் இந்த நிகழ்வை பாம்பு ஒன்று சூரியனை விழுங்குவது போல சித்தரித்தனர்.இந்த நிகழ்வுக்கு காரணமான ராகுவையும் மற்றும் கேதுவையும் பாம்பாக சித்தரித்தனர்.
Monday, July 04, 2005
Monday, June 27, 2005
தொலைநோக்கு பார்வை இல்லாத அரசு
சமீபத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து.இந்த
முடிவு சரியானது என்று பலதரப்பு மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த அரசு ஆணையால் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு கனவோடு, ஒன்று அல்லது இரண்டு வருடங்களை வீண் செய்து இம்ப்ரூவ்மென்ட் தேர்வு மூலம் தங்கள் மதிப்பெண்களை உயர்த்தியுள்ளனர்.இன்னிலையில் இந்த அரசு ஆணை அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.அதனால் இதனை எதிர்த்து மேற்பட்ட மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை ஆதரித்து பாமக சார்பிலும், தொழில், கலை, அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் படி, மனுக்களை விசாரித்த நீதிபதிகள், நுழைவுத் தேர்வை ரத்து செய்த ஜுன் 27,2005 அன்று தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தனர்.
இந்த வழக்கு ஒன்றை நமக்கு தெளிவாக்கியுள்ளது.இந்த அரசு சரியாக ஆராயாமல் இந்த ஆணையை அமல்படுத்தியுள்ளது. அதாவது ஒரு அரசு ஒரு ஆணையை அமலுக்கு கொண்டுவரும்பொழூது அதில் உள்ள சட்ட சிக்கல் ,இதனால் எற்படும் விளைவுகளை பற்றி சரியாக ஆராயவேண்டும்.அனைத்துதரப்பு மக்களை சென்றடையும் விதத்திலும் ,யாரையும் பாதிக்காத வகையிலும் அமையவேண்டும்.
தற்காலத்தில் அனைத்துவகை தொழில்களூம் தரச்சான்றிதழ்கள்(ISO) பெற்று, தங்களுடைய ஒவ்வொரு பணிகளுக்கும் வழிமுறைகளை(Guidelines) வகுத்து பிரச்சனையை முன்னதாகவே கணிக்கும் முறைகளையும் (Risk Management) மற்றும் எதிர்விளைவுகளை பற்றிய தொலைநோக்கும் (Impact Analysis) கொண்டு, அதன்படி சிறப்பாக செயல்படுகின்றன.ஏன் இதை ஒரு அரசு செய்ய தவறியது என்பதே என் கேள்வி.
இத்தகைய அரசின் தவறான முடிவு, துக்ளக் அட்சியில் தொலைநோக்கு பார்வையல்லாது தலைநகர் மாற்றியதற்க்கு ஒப்பாகும்.இது ஒரு மிகைபடுத்திய ஒப்புமை என்றாலும்கூட இதில் சில ஒற்றுமை இருக்கத்தான் செய்கிறது.
நல்ல வேலை இந்த குடியரசு இந்தியாவில் அரசு செய்யும் தவறுகளை எதிர்கொள்ள நீதிமன்றங்கள் உள்ளன.
முடிவு சரியானது என்று பலதரப்பு மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த அரசு ஆணையால் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு கனவோடு, ஒன்று அல்லது இரண்டு வருடங்களை வீண் செய்து இம்ப்ரூவ்மென்ட் தேர்வு மூலம் தங்கள் மதிப்பெண்களை உயர்த்தியுள்ளனர்.இன்னிலையில் இந்த அரசு ஆணை அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.அதனால் இதனை எதிர்த்து மேற்பட்ட மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை ஆதரித்து பாமக சார்பிலும், தொழில், கலை, அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் படி, மனுக்களை விசாரித்த நீதிபதிகள், நுழைவுத் தேர்வை ரத்து செய்த ஜுன் 27,2005 அன்று தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தனர்.
இந்த வழக்கு ஒன்றை நமக்கு தெளிவாக்கியுள்ளது.இந்த அரசு சரியாக ஆராயாமல் இந்த ஆணையை அமல்படுத்தியுள்ளது. அதாவது ஒரு அரசு ஒரு ஆணையை அமலுக்கு கொண்டுவரும்பொழூது அதில் உள்ள சட்ட சிக்கல் ,இதனால் எற்படும் விளைவுகளை பற்றி சரியாக ஆராயவேண்டும்.அனைத்துதரப்பு மக்களை சென்றடையும் விதத்திலும் ,யாரையும் பாதிக்காத வகையிலும் அமையவேண்டும்.
தற்காலத்தில் அனைத்துவகை தொழில்களூம் தரச்சான்றிதழ்கள்(ISO) பெற்று, தங்களுடைய ஒவ்வொரு பணிகளுக்கும் வழிமுறைகளை(Guidelines) வகுத்து பிரச்சனையை முன்னதாகவே கணிக்கும் முறைகளையும் (Risk Management) மற்றும் எதிர்விளைவுகளை பற்றிய தொலைநோக்கும் (Impact Analysis) கொண்டு, அதன்படி சிறப்பாக செயல்படுகின்றன.ஏன் இதை ஒரு அரசு செய்ய தவறியது என்பதே என் கேள்வி.
இத்தகைய அரசின் தவறான முடிவு, துக்ளக் அட்சியில் தொலைநோக்கு பார்வையல்லாது தலைநகர் மாற்றியதற்க்கு ஒப்பாகும்.இது ஒரு மிகைபடுத்திய ஒப்புமை என்றாலும்கூட இதில் சில ஒற்றுமை இருக்கத்தான் செய்கிறது.
நல்ல வேலை இந்த குடியரசு இந்தியாவில் அரசு செய்யும் தவறுகளை எதிர்கொள்ள நீதிமன்றங்கள் உள்ளன.
Friday, June 03, 2005
நம்பிக்கைத்தான் வாழ்க்கை
எந்த ஒரு விஷயத்தையும் தர்க்கரீதியாக நான் அனுகுவேன்.எதையும் முழுமையாக நம்பாமல் ஏன் எதற்கு என்று கேள்வியை எனக்குள்ளே கேட்டு என் மனம் ஒத்துகொள்ளும் வரை அதை ஆராய்வேன்.இப்படி தர்க்கரீதியாக ஒவ்வொரு விஷயத்தயும் அனுகும்போது,ஒரு திருப்திகரமான முடிவு தெரியும் வரை ஆராய்வது ஒரு வித மன அழுத்தத்தை தருகிறது.என்னுடைய இந்த மனப்போராட்டத்தை சரி செய்ய நான் பலமுறை முயன்று இருக்கிறேன்.இந்த பிரச்சினைக்கு மூலகாரணம் நம்பிக்கையின்மைதான் என்று கண்டறிந்தேன்.
அப்போது எனக்கு நினைவுக்கு வந்தது "நம்பிக்கைத்தான் வாழ்க்கை" என்ற வழக்குமொழி. நாம் மகிழ்ச்சியாக வாழ அல்லது ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையாக வாழ நம்பிக்கை மிகவும் அவசியம்.உண்மையோ பொய்யோ எதையாவது ஒன்றை நம்பவேண்டும் அதுபடி நடக்கவேண்டும்.
எடுத்துக்கட்டாக என் மதநம்பிக்கையை விளக்கவுள்ளேன்.என் தற்போதைய தேடல் உண்மையான உண்மையை தேடுவது.அதாவது கடவுளை ஞானவழியில் தேடுவது.நான் உலகின் பல்வேறு தத்துவஞானிகளின் கருத்துக்கள் அடங்கிய நூல்களை வாங்கி படித்தேன்.இருந்தாலும் இன்னும் தெளிவு பெறவில்லை. இன்றும் என் தேடல் தொடர்கிறது. உண்மையான உண்மையை தேடுவது கடினமான வேலை.ஏதாவது ஒரு மதத்தை அப்படியே நம்பிவிட்டால் இந்த தேடலுக்கு அவிசியம் இருக்காது.
ஒரு நல்ல முகமதியன்,திருகுரானை நம்புகின்றான் மற்றும் 5 வேலை இறைவனை தொழுகிறான்.ஒரு நல்ல கிறுஸ்துவன் இயேசுவை இறைவனாக பார்க்கிறான்.ஒரு நல்ல இந்து அவனுடைய விருப்பம் போல் எண்ணற்ற இந்து கடவுள்களை ஒன்றையோ அல்லது பலவற்றையோ தேர்ந்தெடுத்து வழிபடுகிறான். இப்படி ஒரு இறைவழியை நம்பிவிட்டவர்களுக்கு உண்மை தேடுதல் என்ற மனபோராட்டம் தேவைபடவில்லை.
ஒவ்வொரு தத்துவஞானியும் இப்படி உண்மை தேட ஆரம்பித்து பின்னர் ஒரு தத்துவத்தை உருவாக்கி அதன் மீது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை மற்றும் ஒரு மன நிறைவு ஏற்பட்டு தங்களுடைய மனபோராட்டத்திற்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்கள்.
புத்தர் தனது ஆடம்பர வாழ்கையை விட்டு உண்மையான,மனநிறைவு அளிக்ககூடிய ஒரு விளக்கத்தை தேடி அலைந்தார்.கடைசியில் "ஆசைதான் துன்பத்திற்கு காரணம்" என தொடங்கி 8 வகையான நல்வழியை வழங்கினார்.அவர் கூறியதில் எவ்வளவு உண்மை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர் அவருடைய தத்துவத்தை நம்பினார்.முக்தி என்பது ஒரு விஷயத்தை முழுமையாக நம்புவதால் கிடைப்பது என்று எனக்கு இதன்மூலம் புலப்படுகிறது.
அதாவது,சரியோ,தவறோ மக்கள் எதையாவது ஒன்றை நம்புகின்றனர் மற்றும் அதுபடி நடக்கின்றனர்.ஒன்று கடவுளை முழுமையாக நம்பவேண்டும் அல்லது முழுமையாக நம்பகூடாது. ஆனால் இதில் எந்த பிரிவையும் சாராமல் இருப்பதுதான் என்னுடைய பிரச்சனை. சிலர் இந்த உலகம் உருவாக்கப்பட்டது மனிதன் மகிழ்ச்சியாக வாழ என நம்புகின்றனர்.சிலர் இந்த மனிதபிறவி எடுத்தது இறைவனை தேடி அவன் திருவடியை அடைவதற்கு என எண்ணி துறவு மேற்கொள்கிறார்கள்.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு நம்பிகையோடு வாழ்க்கையை அனுகுகிறார்கள்.நம்பிக்கை வேறுபடுகிறது ஆனால் எல்லொருக்கும் நம்பிக்கை இருக்கிறது.
அப்போது எனக்கு நினைவுக்கு வந்தது "நம்பிக்கைத்தான் வாழ்க்கை" என்ற வழக்குமொழி. நாம் மகிழ்ச்சியாக வாழ அல்லது ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையாக வாழ நம்பிக்கை மிகவும் அவசியம்.உண்மையோ பொய்யோ எதையாவது ஒன்றை நம்பவேண்டும் அதுபடி நடக்கவேண்டும்.
எடுத்துக்கட்டாக என் மதநம்பிக்கையை விளக்கவுள்ளேன்.என் தற்போதைய தேடல் உண்மையான உண்மையை தேடுவது.அதாவது கடவுளை ஞானவழியில் தேடுவது.நான் உலகின் பல்வேறு தத்துவஞானிகளின் கருத்துக்கள் அடங்கிய நூல்களை வாங்கி படித்தேன்.இருந்தாலும் இன்னும் தெளிவு பெறவில்லை. இன்றும் என் தேடல் தொடர்கிறது. உண்மையான உண்மையை தேடுவது கடினமான வேலை.ஏதாவது ஒரு மதத்தை அப்படியே நம்பிவிட்டால் இந்த தேடலுக்கு அவிசியம் இருக்காது.
ஒரு நல்ல முகமதியன்,திருகுரானை நம்புகின்றான் மற்றும் 5 வேலை இறைவனை தொழுகிறான்.ஒரு நல்ல கிறுஸ்துவன் இயேசுவை இறைவனாக பார்க்கிறான்.ஒரு நல்ல இந்து அவனுடைய விருப்பம் போல் எண்ணற்ற இந்து கடவுள்களை ஒன்றையோ அல்லது பலவற்றையோ தேர்ந்தெடுத்து வழிபடுகிறான். இப்படி ஒரு இறைவழியை நம்பிவிட்டவர்களுக்கு உண்மை தேடுதல் என்ற மனபோராட்டம் தேவைபடவில்லை.
ஒவ்வொரு தத்துவஞானியும் இப்படி உண்மை தேட ஆரம்பித்து பின்னர் ஒரு தத்துவத்தை உருவாக்கி அதன் மீது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை மற்றும் ஒரு மன நிறைவு ஏற்பட்டு தங்களுடைய மனபோராட்டத்திற்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்கள்.
புத்தர் தனது ஆடம்பர வாழ்கையை விட்டு உண்மையான,மனநிறைவு அளிக்ககூடிய ஒரு விளக்கத்தை தேடி அலைந்தார்.கடைசியில் "ஆசைதான் துன்பத்திற்கு காரணம்" என தொடங்கி 8 வகையான நல்வழியை வழங்கினார்.அவர் கூறியதில் எவ்வளவு உண்மை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர் அவருடைய தத்துவத்தை நம்பினார்.முக்தி என்பது ஒரு விஷயத்தை முழுமையாக நம்புவதால் கிடைப்பது என்று எனக்கு இதன்மூலம் புலப்படுகிறது.
அதாவது,சரியோ,தவறோ மக்கள் எதையாவது ஒன்றை நம்புகின்றனர் மற்றும் அதுபடி நடக்கின்றனர்.ஒன்று கடவுளை முழுமையாக நம்பவேண்டும் அல்லது முழுமையாக நம்பகூடாது. ஆனால் இதில் எந்த பிரிவையும் சாராமல் இருப்பதுதான் என்னுடைய பிரச்சனை. சிலர் இந்த உலகம் உருவாக்கப்பட்டது மனிதன் மகிழ்ச்சியாக வாழ என நம்புகின்றனர்.சிலர் இந்த மனிதபிறவி எடுத்தது இறைவனை தேடி அவன் திருவடியை அடைவதற்கு என எண்ணி துறவு மேற்கொள்கிறார்கள்.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு நம்பிகையோடு வாழ்க்கையை அனுகுகிறார்கள்.நம்பிக்கை வேறுபடுகிறது ஆனால் எல்லொருக்கும் நம்பிக்கை இருக்கிறது.
Wednesday, June 01, 2005
பிரபஞ்சம் என் சொந்த ஊர்
எனக்கு மிகவும் பிடித்த சொற்றொடர்
"பிரபஞ்சம் என் சொந்த ஊர்" - கல்பனா சாவ்லா
இதுவே என் முதல் தமிழ் இணைய பதிவு
"பிரபஞ்சம் என் சொந்த ஊர்" - கல்பனா சாவ்லா
இதுவே என் முதல் தமிழ் இணைய பதிவு
Subscribe to:
Posts (Atom)